தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Jan 27 2020 4:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரை பொறுத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, வேலூர் உள்ளிட்ட மலைப்பாங்கான மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் கடும் பனிமூட்டம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.