பேரறிஞர் அண்ணாவின் 51-வது நினைவு தினம் வரும் 3-ம் தேதி அனுசரிப்பு - சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்மாலை வைத்து டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்துகிறார்

Jan 27 2020 6:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 51-வது நினைவு தினத்தையொட்டி, வரும் 3-ம் தேதியன்று, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், சென்னையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்த்தாயின் தவப்புதல்வர், தமிழர்களை தலைநிமிர வைத்த தங்கத் தலைவர், எழுத்தாலும், பேச்சாலும் உணர்வூட்டிய ஏந்தல் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு, வரும் 3-ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டம், ஊராட்சி கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறும், அந்த அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00