டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை - தலைமறைவு குற்றவாளி முகப்பேர் ஜெயக்குமாரை தேடும் பணி தீவிரம்
Jan 28 2020 12:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில், தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி முகபேர் ஜெயக்குமாரை தேடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 பதவிகளுக்கான எழுத்துத் தேர்வில் நடந்த முறைகேடு புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த முறைகேடு வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்டவர்கள், முறைகேடு செய்து சேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த, கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்த்த சிவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே ராஜசேகர், சீனுவாசன் ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே குரூப்-4 தேர்வு முறைகேட்டில் தலைமறைவாக உள்ள மக்கிய குற்றவாளியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் முறைகேடு தொடர்பான முழு விரங்களை சேகரிக்கும் நடவடிக்கையிலும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.