கன்னியாகுமரியில் நகை கடை அதிபரின் இல்லம் மற்றும் கடையில் திருட்டு : 255 சரவன் நகை - ரூ.2.5 லட்சம் ரொக்கம் கொள்ளை
Jan 28 2020 12:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரியில் நகை கடை அதிபரின் இல்லம் மற்றும் கடையில் புகுந்து 255 சவரன் நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் பொன்.விஜய். இவர் அப்பகுதியில் தங்க நகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் வீட்டின் மாடி வழியாக வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூஜை அறையில் இருந்த நகை கடை சாவியை திருடியதோடு வீட்டில் இருந்த இரண்டரை லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். பின்னர், நகை கடைக்கு சென்ற கொள்ளையர்கள் கடையை திறந்து தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர். மொத்தம் 255 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கொள்ளை சம்பவம் குறித்து மார்த்தண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.