தூத்துக்குடியில் நள்ளிரவு கோஷ்டி மோதலில் ஒருவர் குத்தி கொலை : 2 பேர் பலத்த காயம் - போலீஸ் குவிப்பு
Jan 28 2020 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில், நள்ளிரவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். மாதாநகரை சேர்ந்த ரவி என்பவர், மதுபானகடை பார் நடத்தி வருகிறார். இவருக்கும், அப்பகுதியினை சேர்ந்த செல்வம் என்வருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ள நிலையில், நேற்று நள்ளிரவு குடிபோதயில் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் செல்வம் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். செல்வம் கோஷ்டியைச் சேர்ந்த இருவர், கத்திக்குத்து காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.