குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு : சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றக்கிளையில் முறையீடு
Jan 28 2020 1:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் நீலமேகம், முகமது ரஃஸ்வி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பு கோரிக்கை முன்வைத்தனர். குரூப் 4 தேர்வில் மட்டுமல்லாமல், குரூப்1, குரூப்2 தேர்வுகளிலும் முறைகேடு நடைபெற்றதாக செய்திகள் வெளியாகி வருவதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழக காவல்துறையின் கீழ் இயங்கும் சிபிசிஐடி விசாரித்தால், வழக்கின் உண்மை நிலை தெரியவராது என்பதால், வழக்கை சிபிஐ விசாரிக்கவும், அதனை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்கவும் உத்தரவிட வேண்டும் எனவும் நீலமேகம், முகமது ரஃஸ்வி முறையிட்டனர்.