தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்‍கு தமிழிலும் நடைபெறும் - உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் தமிழக அரசு தகவல்

Jan 28 2020 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்‍கு தமிழிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெறும் என உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வரும் பிப்ரவரி 5ம் தேதி தஞ்சை பெரிய கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கோவிலின் குடமுழுக்கு விழாவை நடத்த தொல்லியல் துறையிடம் அனுமதி பெறப்படாததால், குடமுழுக்கு நடத்த தடை விதிக்கக்கோரி சரவணன் என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் நடத்த உத்தரவிடக்கோரி சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். தமிழிலேயே குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடக்கோரி, தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, மத்திய தொல்லியல்துறையின் அனுமதியுடன் தான் தஞ்சாவூர் பெரிய கோயிலில் குடமுழுக்கு நடத்த உள்ளதாக தஞ்சாவூர் பெரிய கோயில் தேவஸ்தானம் தரப்பில் பதில் மனு அளிக்‍கப்பட்டது. இதேபோல், தமிழக அரசு சார்பில் கும்பாபிஷேகம் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் தான் நடைபெறும் என தெரிவிக்‍கப்பட்டது. இதனையடுத்து, தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பு நாளைக்கு ஒத்தி வைக்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00