பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு : வழக்கு விசாரணை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றம்
Jan 28 2020 2:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொள்ளாச்சி பாலியல் வழக்கு, தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதீஷ் வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரையும், கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று போலீசார் ஆஜர் படுத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 24 ஆம் தேதி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதன் நகல் குற்றவாளிகள் தரப்பிற்கு இன்று வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு உள்ளதால், அமர்வு நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, குற்றவாளிகளை வரும் 11-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.