காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - கைதான தவ்ஃபீக் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு
Jan 28 2020 4:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில், நாகர்கோவில் பகுதியிலுள்ள தவ்ஃபீக்-கின் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் ஆகிய இருவரால் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். பின்னர் அவ்விருவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை குமரி மாவட்ட போலீசார் நாகர்கோவில் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாணை மேற்கொண்டு வருகின்றனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் கத்தி ஆகியவை ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டன. இருவரிடமும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இன்று நாகர்கோவில் இளங்கடை பகுதியில் உள்ள தவ்பீக் வீட்டிற்கு அவரை நேரில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.