கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கு : விசாரணைக்கு ஆஜராகாததால் நிர்மலாதேவிக்கு பிடிவாரண்ட்
Jan 28 2020 4:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பேராசிரியை நிர்மலாதேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியயை நிர்மலாதேவி, உதவிபேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 13-ம் தேதி பேராசிரியர் நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் வழக்கிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்தார்.
இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பரிமளா, நிர்மலா தேவிக்கு 2-வது முறையாக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். ஏற்கனவே நவம்பர் 18-ம் தேதி நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.