அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, தஞ்சாவூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றிய கழக செயலாளர் திரு.பொன் த. மனோகரன் தலைமையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர் திரு.கருணாநிதி, நெய்வாசல் ஊராட்சிமன்றத் தலைவர் திரு.முனுசாமி, கரும்பூர் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி அனுசுயா கலியபெருமாள் உள்ளிட்டோர், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு.ராஜசேகர் தலைமையில், திருவிடை நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ள திருமதி மாரியம்மாள் பூமிநாதன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் தே.மு.தி.க மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் திரு.செந்தில்குமார், அக்கட்சியிலிருந்து விலகி, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில், கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கும்பகோணம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு பாலமுருகன் தலைமையில் கீழ்ப்பழையார் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றுள்ள திரு.ஜி. ராமமூர்த்தி, துணைத்தலைவர் திருமதி.கார்த்திகா செங்குட்டுவன், உறுப்பினர்கள் திரு.கண்ணன், திருமதி சாவித்திரி ஆகியோர், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதேபோல, ஆரியப்படையூர் ஊராட்சி மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள திரு ஜெய்சங்கர், திரு பால குமார், உடையார் கோயில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள திரு.சுரேஷ் குமார் ஆகியோர் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, தஞ்சாவூர் மாநகர் மாவட்டம் மாரியம்மன் கோயில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற திருமதி சுஜாதா தனசேகரன் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு.சாகுல் அமீது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திரு. வேங்கை கணேசன், திரு.கார்த்திகேயன், திரு. மதிவாணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அப்போது உடனிருந்தனர்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் பழவேரி காடு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள திருமதி சுதா, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது கழகப் பொதுக்குழு உறுப்பினர் திரு சிவகுமாரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் வேப்பங்காடு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்ற திரு.எம்.சிவராஜன் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஊராட்சி மன்ற செயலாளர் திரு.செந்தமிழன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அப்போது உடனிருந்தனர்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சாந்தங்காடு ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி. செல்வராணி, திருமதி.பபிதா, திரு. சசிதரன் உள்ளிட்டோர், கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் திருமங்கலக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள திரு. V.N.R.சுரேஷ், தனது குடும்பத்தினருடன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கரூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு. P.S.N.தங்கவேலு தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் திரு. சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திரு. தங்கவேலு, கழக வழக்கறிஞர் அணி திரு. ஜெயசேகரன், அம்மா பேரவை செயலாளர் திரு. அசோக், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திரு. சுரேஷ், மகளிரணி செயலாளர் திருமதி ஜெயா, மாணவரணி செயலாளர் திரு.சிவக்குமார், இளைஞர் பாசறை செயலாளர் திரு மணிகண்டன், மீனவர் அணி செயலாளர் திரு.பாலகிருஷ்ணன், இலக்கிய அணி செயலாளர் திரு.துரைமுருகன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் திரு.செந்தில்குமார், பொறியாளர் அணி செயலாளர் திரு.சுதர்சன் உள்ளிட்டோர் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு.S. கார்த்திகேயன் தலைமையில், பெரம்பலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியக்குழு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. எஸ். மணிவேலன், செஞ்சேரி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள திருமதி.வசந்தா பானு, வெண்பாவூர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள திரு.பால சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
பெரம்பலூர் ஒன்றியக் கழகச் செயலாளர் திரு.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் திரு. குலோத்துங்கன் மற்றும் நிர்வாகிகள் திரு.மதுபாலன், திரு. முருகானந்தம், திரு. பாலு, திரு. கதிர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் அப்போது உடனிருந்தனர்.
தஞ்சை மாநகர் மாவட்டம் பெரம்பூர் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றுள்ள திருமதி.ஆர்.ஜெயராஜாவள்ளி திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது அவரது மகனும், மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளருமான திரு நிரஞ்சன் - ஆஷா தம்பதிகளின் பெண் குழந்தைக்கு பிரகதி என கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பெயரிட்டார்.
கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, தஞ்சை தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு.இளையராஜா சந்தித்து, தனது திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார். அப்போது கழக நிர்வாகிகள் திரு.துரைராஜ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் திரு. ராமசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இந்த சந்திப்புகளின் போது கழக துணை பொதுச்செயலாளர் திரு.எம்.ரங்கசாமி, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ம.சேகர், தஞ்சாவூர் மாநகர் மாவட்டக்கழக செயலாளர் திரு. ராஜேஷ்வரன், கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு. வேலு.கார்த்திகேயன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.