குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை திமுக தூண்டிவிடுகிறது - பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் குற்றச்சாட்டு
Feb 16 2020 3:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை, திமுக தூண்டிவிடுவதாக பாஜக மூத்த தலைவர் திரு. இல. கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தானை விட இந்தியாவில்தான் இஸ்லாமியர்கள் சுதந்திரமாக இருப்பதாக தெரிவித்தார். குடியுரிமை திருத்த சட்டத்தை, பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பே இல்லை என குறிப்பிட்ட திரு. இல. கணேசன், தமிழகத்தில் அச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை திமுக தூண்டிவிடுவதாக குற்றம் சாட்டினார்.