திருநெல்வேலி மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகி தாயார் மறைவுக்கு, கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல்
Feb 16 2020 3:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநெல்வேலி மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகியின் தாயார் மறைவுக்கு, திரு. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருநெல்வேலி மாநகர் மாவட்டம் மானூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் திரு. மாரிமுத்துவின் தாயார் திருமதி. செல்லம்மாள், உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.