சென்னையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - போலீசார் அடக்குமுறைக்கு எதிராக 3ம் நாளாக இன்றும் இஸ்லாமியர்கள் போராட்டம்
Feb 16 2020 3:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்து தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. சம்பவம் நடைபெற்ற வண்ணாரப்பேட்டையில் இன்றும் இஸ்லாமிய பெண்கள் உட்பட ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு சம்பவங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பேலீசார் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து இஸ்லாமியர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து போராடினர். பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை வண்ணாரப்பேட்டையில் 3வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இஸ்லாமியப் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானார் பங்கேற்றுள்ளனர்.