குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பதிவு செய்தவர்கள் மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யத்தேவையில்லை : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
Feb 16 2020 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பதிவு செய்தவர்கள் மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யத்தேவை இல்லை என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
குரூப் 4 எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழ் நகல்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் அண்மையில் தெரிவித்திருந்தது. இதனால், ஏற்கனவே சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்கள் மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டுமா என்ற குழப்பம் எழுந்தது. இது குறித்து விளக்கமளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் கூடுதலாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட 27 தேர்வர்கள் மட்டும் சான்றிதழ்களின் நகல்களை பதிவேற்றம் செய்தால் போதும் என அறிவித்துள்ளது.