தமிழகத்தில் தன்னாட்சி அழிந்து விட்டது : அமைதியாக போராடியவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன்? - சீமான் குற்றச்சாட்டு
Feb 16 2020 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு போன்ற திட்டங்களை எப்போது தமிழக அரசு ஏற்றுக் கொண்டதோ, அப்போதே தமிழகத்தில் தன்னாட்சி அழிந்து விட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் குற்றம்சாட்டியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, வண்ணாரப்பேட்டையில் 3-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த அவர், அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.