தமிழ் கடவுளுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் : இயக்குநர் கவுதமன் வலியுறுத்தல்
Feb 16 2020 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கின்போது தமிழ்மொழி இடம்பெற வேண்டும் என இயக்குநர் திரு. கவுதமன் தலைமையிலான தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். திண்டுக்கலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், தமிழ் கடவுளான முருகனுக்கு தமிழில் அர்ச்சனைகள் நடைபெறுவதில்லை என வேதனை தெரிவித்தனர்.