சென்னையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் - போலீசார் அடக்குமுறைக்கு எதிராக 3ம் நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் போராட்டம்
Feb 16 2020 5:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் 3-வது நாளாக இன்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அ.ம.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை எம்.எம்.டி.ஏ பகுதியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.ம.மு.க சார்பில், தென்சென்னை வடக்கு மாவட்டக்கழகச் செயலாளர் திரு.சுகுமார் பாபு மற்றும் கழகத்தினர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடல் பகுதியில் 3-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இஸ்லாமியப் பெண்கள், அ.ம.மு.க, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டு, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளமதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடல் பகுதியில் 3-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இஸ்லாமியப் பெண்கள், அ.ம.மு.க, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டு, மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அ.ம.மு.க வின் புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு.குமரேசன் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், காவல்துறைக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தடியடி நடத்திய காவல் துறையினரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.