பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்கும் வரை "பூஜ்யம் தான்" - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

Feb 20 2020 6:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்த தீர்மானத்தை நாங்கள் ஏற்கும் வரை அது பூஜ்யம் மதிப்பிலானதுதான் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி தாக்‍கல் செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மத்திய விசாரணை அமைப்பு விசாரித்த வழக்கில், மத்திய அரசை கலந்தாலோசித்துதான் மாநில அரசு முடிவெடுக்க முடியும் என்றும், 7 பேருக்கும் உச்ச நீதிமன்றம் தான் ஆயுள் தண்டனை வழங்கியிருப்பதாகவும், மத்திய அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. நளினி சட்டவிரோத காவலில் இல்லை என்றும், 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை நிராகரித்துவிட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 7 பேர் விடுதலையை மத்திய அரசு ஒப்புக்கொள்ளாதவரை, தமிழக அரசின் தீர்மானம் பூஜ்யம் மதிப்பிலானது தான் என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, இவ்வழக்‍கில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00