மாண்புமிகு அம்மாவின் 72வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம்
Feb 20 2020 8:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மாவின் 72வது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. பூத் கமிட்டி அமைப்பது, கழக நிர்வாகிகள் தேர்வு குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.எஸ்.ஆர்.தர்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் திரு.துரை.வீராசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட மாற்றுக்கட்சியில் இருந்து விலகி 100க்கும் மேற்பட்டோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.