சேலம் மாவட்டம் ஆத்தூரில் போலீசாரின் துணையோடு தாபாவில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனை
Feb 20 2020 8:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் ஆத்தூரில் போலீசாரின் துணையோடு நெடுஞ்சாலைகளில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கெங்கவல்லி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான தாபா செயல்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் அதிகளவில் இங்கு வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் சட்டவிரோதமாக மதுப்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு உள்ளூர் போலீசார் உடந்தையாக உள்ளதாக கூறப்படும் நிலையில், தாபாவில் மது அருந்தும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.