ஈரோடு மாவட்டத்தில் பள்ளி பணி நேரத்தில் வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரிய நிர்பந்தம் : வட்டார கல்வி அலுவலர் மீது ஆசிரியர் குற்றச்சாட்டு
Feb 20 2020 9:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டத்தில் பணி நேரத்தில் பள்ளியில் வேலை செய்ய விடாமல் வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களை வேலை செய்ய நிர்பந்திப்பதாக வட்டார கல்வி அலுவலர் மீது ஆசிரியர் புகார் தெரிவித்துள்ளார். அந்தியூரைச் சேர்ந்த நிகோலஸ் சகாயராஜ் என்ற அரசுப் பள்ளி ஆசிரியர், வட்டார கல்வி அலுவலராக பணி புரியும் தேவகி என்பவர் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளை பள்ளி வேலை நேரத்தில் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதற்கு பதிலாக வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பணி புரிய நிர்ப்பந்திப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.