டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு வழக்கு - விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Feb 20 2020 9:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. கடந்த ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகார்தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரி விழுப்புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சி.பி.சி.ஐ.டி. விசாரணை வெறும் கண்துடைப்பாகவே இருக்கும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரையும் பாதுகாக்க முயற்சிப்பதாகவே உள்ளதாக, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் தொடர்பாக முழுமையாக விசாரிக்க இந்த வழக்குகளின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.