தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் தொடர்பாக தெரிவித்த கருத்து - நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் முன்னிலையில் ஆஜராக விலக்கு கேட்கிறார் ரஜினிகாந்த்
Feb 22 2020 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராக விலக்கு கோரி நடிகர் ரஜினிகாந்த் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியதே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என ரஜினி காந்த் கூறியிருந்தார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்க்கிச்சூடு வழக்கில் வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தான் ஆஜராகும் பட்சத்தில் அங்கு ரசிகர்கள் கூட்டம் கூடி, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ரஜினிகாந்த் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால், அதற்கு பதில் அளிக்க தயாராக இருப்பதாக தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.