மயிலாடுதுறை அருகே செம்பியன் கண்டியூர் பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள அரசுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை
Feb 22 2020 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே, செம்பியன் கண்டியூர் பகுதியில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, அரசுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற தாய்மொழி தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொல்லியல் ஆய்வாளர் திரு. ஒடிசா பாலு, பிற மொழிகள் தோன்றுவதற்கு முன்பே, தமிழ் மொழி தோன்றி, அதனை மக்கள் பேசி வாழ்ந்ததற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறினார். மயிலாடுதுறை அருகே உள்ள செம்பியன் கண்டியூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தமிழரின் நாகரீகம் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே, இப்பகுதியில் தொல்லியல் துறை, ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.