திருப்பூர் அருகே கதிர்பிடிக்கும் தருவாயில் நெற்பயிர்களை வேகமாகத் தாக்கிவரும் புகை நோயால் விவசாயிகள் கவலை
Feb 22 2020 3:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பூரை அடுத்த உடுமலை அருகே கதிர்பிடிக்கும் தருவாயில் நெற்பயிர்களை வேகமாகத் தாக்கிவரும் புகை நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கல்லாபுரம், எலையமூத்தூர், செல்வபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் அமராவதி அணை பழைய ஆயக்கட்டு பாசனத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பளவில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். கதிர்பிடித்து பால் பிடிக்கும் தருவாயில் புகை நோய் வேகமாக தாக்கி வருகிறது. வேளாண்துறையினர் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.