ஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் பறிமுதல்
Feb 22 2020 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா அரிசி, ரயில்கள் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் செல்லும் ரயில்களில் சோதனை நடத்தப்பட்டது. ரயில் பெட்டிகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதைக் கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர்.