கொடைக்கானலில் ஸ்வீட் பட்டாணி பயிர் அமோக விளைச்சல் : நல்ல லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
Feb 22 2020 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதிகளில் விவாயிகள் விளைவித்த ஸ்வீட் பட்டாணி நல்ல விளைச்சல் கண்டுள்ளதால், விவசாயிகள் லாபம் அடைந்துள்ளனர். அங்குள்ள வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, பாலக்காடுகோட்டை போன்ற மலைக் கிராமங்களில் ஊடு பயிராக ஸ்வீட் பட்டாணி கடந்த மார்கழி மாதம் பயிரிடப்பட்டது. தற்போது இப்பயிர் விவசாயிகளுக்கு நன்கு பலனளித்து வருகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதால், நல்ல லாபம் கிடைத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.