சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்பு

Feb 22 2020 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாகியம்பட்டியில் மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் பங்கேற்றன.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நாகிப்பட்டியில் மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.ராமன் தொடங்கி வைத்தார். வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை இளம் காளையர்கள் அடக்கினர்.

காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு குக்கர், சைக்கிள், வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன. அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கு விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

அரியலூர் மாவட்டம் சிங்கராயபுரத்தில் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு நடைபெற்றது. திருச்சி, மணப்பாறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 350 காளைகள் போட்டியில் பங்கேற்றன. காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

தஞ்சை மாவட்டம் மாதாகோட்டை லூர்து அன்னை ஆலய விழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 750-க்‍கும் காளைகளும், 500-க்‍கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சீறிப் பாய்ந்த காளைகளை தீரத்துடன் அடக்‍கிய வீரர்களுக்‍கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்‍கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00