சேலத்தில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து : லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
Feb 22 2020 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பசை தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்கள் எரிந்து நாசமாயின.
செவ்வாய்ப்பேட்டையில் இயங்கி வரும் பசை தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து அதிக அளவிலான புகை இன்று அதிகாலை வெளியேறுவதை அப்பகுதி மக்கள் பார்த்துவிட்டு, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், அரைமணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தில் பசை தயாரிப்பதற்கு தேவையான ஸ்டார்ச் மூட்டைகள், விறகுகள், இயந்திரங்கள் ஆகியவை எரிந்து நாசமாயின. 15 லட்சம் ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து செவ்வாய்ப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.