திருவள்ளூர் மாவட்டத்தில் கண்டெய்னர் லாரியில் டீசல் நிரப்பும் போது தீ விபத்து : உடலில் தீப்பிடித்தபடி அலறியடித்து ஓடிய ஓட்டுனர்
Feb 22 2020 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே, கண்டெய்னர் லாரியில்
டீசல் நிரப்பும் போது திடீரென தீப்பிடித்து ஓட்டுனர் ஒருவர் உடலில் தீப்பிடித்தபடி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்திரப்பிரதேச மாநிலம் கேராய் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் சிங் என்பவர், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் தனது கண்டெய்னர் லாரிக்கு டீசல் நிரப்பச் சென்றார். லாரியில் டீசல் நிரப்பப்பட்டபோது, அங்கிருந்த ஊழியர், டீசல் நிரப்பும் பைப்பை ராஜேஷ்குமாரிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக டீசல் டேங்கில் இருந்து தீப்பிடித்து மளமளவென எரிந்தது. ராஜேஷ்குமாரின் உடலில் தீப்பிடித்து அலறியடித்து ஓடிய காட்சிகள், அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவானது. தீ விபத்தால் அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள், ஓட்டுனரின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.