தொடர் உச்சத்தில் தங்கத்தின் விலை: சவரனுக்கு மேலும் 168 ரூபாய் அதிகரித்து, 32 ஆயிரத்து 500 ரூபாயைத் தாண்டியது
Feb 23 2020 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து, 32 ஆயிரத்து 500 ரூபாயைத் தாண்டியுள்ளது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை, நேற்று, வரலாறு காணாத வகையில், ஒரு சவரன், 32 ஆயிரத்து 500 ரூபாயை தாண்டியுள்ளது. ஆபரணத்தங்கம் கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்து, சவரனுக்கு 168 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் 4 ஆயிரத்து 72 ரூபாய்க்கும், ஒரு சவரன் 32 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 34 ஆயிரத்து 208 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி ஒரு கிராம் 52 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோ 52 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.