குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம் அமைப்பது சிறந்தது : முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
Feb 23 2020 5:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிலவில் மெதுவாக தரையிறங்குதல், மீண்டும் விண்கலத்தை பூமிக்கு கொண்டுவருதல் ஆகிய பணிகளை திறம்பட முடித்த பிறகே நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி நடைபெறும் என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
அரியலூர் நகரில் உள்ள தனியார் பள்ளி ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி திரு. மயில்சாமி அண்ணாதுரை, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி ஏவுதளம் அமைப்பது என்பது மிகச்சிறந்தது என்றும், இதனால் அதிக எடைகொண்ட செயற்கைகோள்களை அனுப்பமுடியம் என்றும் கூறினார்.