மாண்புமிகு அம்மா பிறந்தநாள் விழா - நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் மாபெரும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் - கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க தொண்டர்கள் பேரார்வம்
Feb 23 2020 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மாவின் 72-வது பிறந்த நாள் விழாவையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நாளை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கலந்துகொண்டு எழுச்சியுரையாற்றுகிறார்.
தமிழகத்தின் வீரக்காவியமாக, என்றும் நம்மை இயக்கிடும் சக்தியாக, பன்னாட்டு தலைவர்கள் போற்றிய பேராளுமையாக, மக்கள் நலனுக்காக நாளும் உழைத்திட்ட நம் அன்பு தாய், புரட்சித்தலைவி அம்மாவின் 72-வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டக்கழகத்தின் சார்பில், நாளை மாலை 4 மணியளவில் கங்கைகொண்டானில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கலந்துகொண்டு, ஏழை, எளியோருக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி, எழுச்சி உரையாற்ற உள்ளார். இந்நிகழ்ச்சியில், தலைமைக் கழக நிர்வாகிகள், அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.