அம்மா பிறந்தநாள் பொதுக்கூட்டம் : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்கத் தயாராகும் தொண்டர்கள் - கழக நிர்வாகிகள் ஆய்வு
Feb 23 2020 5:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அம்மாவின் 72வது பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அ.ம.மு.க சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதில் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்ற உள்ளார். திரு.டிடிவி தினகரனை உற்சாகமாக வரவேற்கவும், அவரது உரையைக் கேட்கவும் தொண்டர்கள் தயாராகி வருகின்றனர். விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அவற்றை கழகத் துணைத் தலைவர் திரு.அன்பழகன், கழக அமைப்புச் செயலாளர் திரு.ஹென்றி தாமஸ், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் பார்வையிட்டனர்.