செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் : உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற விதிஷா பாலியன் பேட்டி
Feb 23 2020 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளை, பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று, செவித்திறன் குறைந்தோருக்கான உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற விதிஷா பாலியன் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில், எல்ஜெய் செவித்திறன் மையம் சார்பில், செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், செவித்திறன் குறைந்தோருக்கான, 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற, விதிஷா பாலியன் சிறப்பு விருந்தினாரக பங்கேற்று தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், செவித்திறன் குறைந்த குழந்தைகள் ஏராளமானோர் பங்கேற்று, உலக அழகியுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.