தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு
Feb 24 2020 7:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையில், லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஜிபியாக இருந்த திரு. சுனில் குமார் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபியாக இருந்த இருந்த திரு. சுனில் குமார் சிங் சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை ஏடிஜிபியாக இருந்த திரு. அபாஷ் குமார் பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் திரு. எஸ்.என். சேஷாசாய் சிறப்பு பணிக்குழு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.