குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் : இந்திய மக்களுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான போராட்டம் - சிதம்பரம்
Feb 24 2020 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் நடைபெறும் போராட்டங்கள், இந்திய மக்களுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் இடையிலானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் திரு.ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற சிஏஏ-வுக்கு எதிரான கூட்டத்தில் பேசிய திரு. சிதம்பரம், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கடுமையாக விமர்சனம் செய்தார். நாடாளுமன்றத்தில், பா.ஜ.க.-விற்கு பெரும்பான்மை உள்ளதால், இந்தியாவை இந்து நாடாக மாற்ற, அக்கட்சி முயற்சிப்பதாக அவர் தெரிவித்தார். சிஏஏ-வுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டங்கள், பாரதிய ஜனதாவுக்கு எதிரான போராட்டங்கள் என்றும் திரு. சிதம்பரம்ெ தெரிவித்தார்.