திருச்சி சமயபுரம் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து : மின்மாற்றி சேதமானதால் 52 கிராமங்கள் இருளில் மூழ்கின
Feb 24 2020 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி சமயபுரம் துணை மின் நிலையத்தில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதால் 52 கிராமங்கள் இருளில் மூழ்கின.
நெய்வேலி அனல்மின் நிலையத்திலிருந்து 110 மெகாவாட் மின்சாரம் திருச்சி சமயபுரம் துணை மின் நிலையத்திற்கு விநியோகம் செய்யப்பட்டு, பின்னர் துணை நிலையத்திலிருந்து, மண்ணச்சநல்லூர், சிறுகனூர் போன்ற பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலக எல்லைக்குட்பட்ட வீடுகள், தொழிற்சாலைகள், விவசாய மின்மோட்டார்கள் ஆகியவற்றுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று மாலை சமயபுரம் துணை மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். எனினும் மின்மாற்றி முற்றிலும் எரிந்ததால் 52 கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கின.