சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே தமிழக அரசு பயனற்ற திட்டங்களை அறிவிப்பதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - தமிழகத்தில் மீண்டும் உண்மையான அம்மா ஆட்சியை உருவாக்குவதே இலக்கு என்றும் திட்டவட்டம்
Feb 24 2020 1:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டே தமிழக அரசு பயனற்ற திட்டங்களை அறிவிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லை பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மீண்டும் உண்மையான அம்மா ஆட்சியை உருவாக்குவதே இலக்கு என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நாட்டில் எந்த ஒரு சட்டமும் மதத்தின் அடிப்படையில் இருக்கக்கூடாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடந்த பட்ஜெட்டில் தாமிரபரணி திட்டம் குறித்து அறிவிக்கப்பட்ட போதிலும், இன்னமும் அது செயல்படுத்தப்படாமல் இருப்பதாகவும் திரு. டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.