குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : திருச்சியில் மக்கள் அதிகாரம் சார்பில் 'அஞ்சாதே போராடு' மாநாடு
Feb 24 2020 2:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற 'அஞ்சாதே போராடு' என்ற கருத்தை மையமாகக் கொண்டு திருச்சியில் மாநாடு நடைபெற்றது.
மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அப்போது சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிராகவும், பாஜக அரசுக்கு எதிராகவும் பாடல்கள் இசைக்கப்பட்டன.