கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்க நகை கடைகளில் கொள்ளையடித்தது தொடர்பாக அதிமுக நிர்வாகி கைது

Feb 24 2020 2:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்க நகை கடைகளில் கொள்ளையடித்தது தொடர்பாக அதிமுக இளைஞர் பாசறை பொருளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் கடந்த மாதம் இரண்டு நகைக்கடைகளில் சுமார் 330 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையில் ஈடுபட்ட புல்லாணிவிளை பகுதியை சேர்ந்த எட்வின் ஜோஸ் என்பவர் கடந்த 19 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டரை கோடி ரூபாய் மதிப்பீலான 330 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாகி இருந்த மார்த்தாண்டத்தை சேர்ந்த, ரமேஷ்குமாரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இவர் அதிமுகவின் குமரி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை பொருளாளர் என்று தெரியவந்துள்ளது. நகை கடை கொள்ளை வழக்கில் ஆளும் கட்சி பிரமுகர் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00