சூறைகாற்றால் நடுக்கடலில் முழ்கிய விசைபடகு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர்
Feb 25 2020 9:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து எடிசன் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் ஜேசுராஜா, சரண், பூமி, ஆண்டி, பிரபு, பாண்டி ஆகிய ஆறு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே இவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது நடுக்கடலில் ஏற்பட்ட திடீர் சூறைக்காற்று காரணமாக விசைப்படகு கடலில் முழ்கியது. இதில் படகிலிருந்த ஆறு மீனவர்களும் உயிருக்கு போராடி தத்தளித்துள்ளனர். இதனை அறிந்த சக மீனவர்கள் ஆபத்தான நிலையில் கடலில் தத்தளித்து கொண்டிருந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. நடுக்கடலில் மூழ்கி சேதமடைந்த விசைபடகிற்க்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.