இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.3,000 லஞ்சம் : ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் கைது
Feb 25 2020 9:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்த சத்திய மூர்த்தி என்பவர், தனது மாமனாரின் இறப்புச் சான்றிதழுக்காக ஈரோடு கோட்டாட்சியர் அலுவலக உதவியாளரான கணேசனை அணுகியுள்ளார். அதற்கு லஞ்சமாக 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதை அடுத்து, 3 ஆயிரம் ரூபாய் தருவதாக தெரிவித்த சத்தியமூர்த்தி, இது தொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனையடுத்து கணேசன், லஞ்ச பணம் பெறும்போது போலீசார் கைது செய்தனர்.