டெல்லியில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Feb 26 2020 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியின் வடகிழக்கு பகுதிகளில் நடைபெற்ற கலவரத்தில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் போராடியவர்களிடையே வன்முறை வெடித்தது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் அரவிந்த் குணசேகர், பர்வீனா, சுரப் சுக்லா, ஆகாஷ் மற்றும் பல செய்தியாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். இதில் அரவிந்த் குணசேகர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். பத்திரிகையாளர்கள் மீதான இந்த தாக்குதலைக் கண்டித்து, சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில், சேப்பாக்கம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் பணிபுரியும் தமிழகத்தை சேர்ந்த செய்தியாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டுமென, பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.