நீட் தேர்வில் மோசடி : சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் மற்றும் அவரது தந்தை மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு
Feb 26 2020 1:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீட் தேர்வில் மோசடி செய்து கல்லூரியில் சேர்ந்ததாக, சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர் மீதும் அவரது தந்தை மீதும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி பெற்ற விவகாரம், கடந்த ஆண்டு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர்கள், இடைத்தரகர்கள் என 14 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மாணவர்களுக்கு பதிலாக தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அண்மையில் வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வரும் தனுஷ் என்ற மாணவர், நீட் தேர்வில் மோசடி செய்து செய்ததாக கல்லூரி நிர்வாகம், புகார் அளித்துள்ளது. இதனடிப்படையில், மாணவர் தனுஷ் மற்றும் அவரது தந்தையிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.