எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்பதால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் : இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை
Feb 26 2020 11:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எல்.ஐ.சி போன்ற லாபத்துடன் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், "தேச வளர்ச்சியின் அடையாளம் எல்.ஐ.சியை பாதுகாப்போம்" என்ற மாநாடு நடைபெற்றது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுவதால், அரசுக்கு ஏற்படும் இழப்பு குறித்து மக்களிடம் டிஜிட்டல் பிரச்சாரம் மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன. எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பதால், அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என்று இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்தது.