காசோலை மூலம் பணம் எடுக்கும் வசதியை வழங்க வேண்டும் : தமிழ்நாடு ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
Feb 26 2020 12:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்கு பதிலாக மீண்டும் காசோலை கையாளும் முறைக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு மாநில ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் திரு.முனியாண்டி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மீண்டும் காசோலை பணப்பரிவர்த்தனை முறையே தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.