கூடலூர் அருகே ஊருக்குள் புகுந்து வீட்டை தரைமட்டமாக்கிய யானை - பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவசாயி
Feb 26 2020 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கூடலூர் அருகே, அதிகாலையில் விவசாயின் வீட்டை உடைத்து யானை தரைமட்டமாக்கியதில், உறங்கிக்கொண்டிருந்த விவசாயி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஓடக்கூலி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சந்திரன் என்பவர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, காட்டு யானை ஒன்று, அவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் யானையை தீ மூட்டியும், சத்தங்கள் எழுப்பியும் விரட்டியடித்தனர். இதில், வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த சந்திரன், கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக யானைகள் அட்டகாசம் செய்து வருவதாக வனத்துறையினருக்கு பலமுறை தகவல் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.