வரும் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை - மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் எனத் தகவல்
Feb 26 2020 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு வரும் 9ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14ம் தேதி 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 20ம் தேதி வரை விவாதம் நடைபெற்றது. அத்துடன் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு முடிவுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக வரும் 9ம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளது. பட்ஜெட் தொடரின் இந்த 2வது அமர்வு 20ம் தேதி வரை நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். அப்போது பல்வேறு துறைகள் சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறவுள்ளது.